Subscribe our YouTube Channel
பாடகர் SPB யின் உடல் சென்னை நுங்கம்பாக்கம் இல்லத்தில் இருந்து தற்போது தாமைரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது.அங்கு உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படுகிறது.மேலும் பண்ணை வீட்டில் SPBயின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவரது உடல் காவல்துறை மரியாதையுடன் SPB யின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த திரு S.P பாலசுப்பிரமணியம் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.