Subscribe our YouTube Channel
அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த இளைஞர் கூறியவை அனைத்டும் பொய் என தெரிய வந்துள்ளது.குறித்த இளைஞர் திருநங்கை சங்கீதாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த இளைஞர் திருநங்கை சங்கீதாவை தொடர்பு கொண்டு ஐடிஐ படித்து விட்டு வேலை தேடி வருகிறேன்.
உங்களது உணவகத்தில் வேலை கிடைக்குமா எனக் கேட்டுள்ளன். இதனை நம்பிய சங்கீதா பரிதாபப்பட்டு கடந்த மாதம் பிரியாணி மாஸ்டராக அவனை வேலைக்கு சேர்த்துள்ளார்.இருப்பிடம் இல்லாமல் தவித்த அவனுக்கு தங்குவதற்கு வீடும் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக ராஜேஷ் சங்கீதாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.இதற்கு ஒப்புக்கொள்ளாத அவர் காவல்துறையில் சொல்லிவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ் அவரை கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.