உலகளாவிய ரீதியில் அதிக பயனாளர்களை கொண்ட செயலியாக வாட்ஸ் அப் விளங்குகிறது.தற்போதைய காலகட்டத்தில் வாட்ஸ் அப் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.அந்நிறுவனம் பயனாளர்களை ஈர்ப்பதற்காக புதிய அப்டேட்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் வழங்கி வருகிறது.இந்நிலையில் புதிய சேவை விதிமுறைகளை வரும் 2021ம் ஆண்டு அபிடேடே செய்யவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி வாட்ஸ் அப் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஒரு புதிய நிபந்தனையை கொண்டுவர உள்ளது. அது வாட்ஸ்அப்பின் terms and privacy policy updates ஐ கட்டாயம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனுடன் உடன்பாடு இல்லை எனில் உங்களது வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்படும் என வாட்ஸ்அப் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பயனாளர்கள் புதிய விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் நீக்கப்படும்.அத்துடன் பயனாளர்கள் தங்களின் chat களை சேமிக்கவும் முகநூல் வழங்கும் சேவைகளை வணிகர்களுக்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றி பல்வேறு தகவல்களையும் பகிர்ந்துள்ளது.
தொடர்ந்து வாட்ஸ் அப்பை பயன்படுத்த வேண்டுமானல் அந்நிறுவனத்தில் விடுக்கப்படும் புதிய விதிமுறைகளுக்கு must agree கொடுக்க வேண்டும்.அத்துடன் இந்த நிபந்தனைகள் வரும் 2021ம் ஆண்டு பெப்ரவரி 8ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.