Subscribe our YouTube Channel
அத்துடன் காவல்துறையினரின் விசாரணையில் சோனிக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான நபர் மூலமாக தான் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறி இருக்கும் என நம்பினர். ஏனெனில் சோனிக்கு மட்டுமே அவர் வீட்டின் தரைத்தளத்தில் வெள்ளியை பெரிய பெட்டியில் வைத்திருந்தது தெரியும்.மருத்துவர் சோனியின் வீட்டுக்கு அருகில் இருந்த வீட்டை சில மாதங்களுக்கு முன்னதாக 90 லட்ச ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்கிய திருடர்கள், அந்த இடத்தை பார்க்க முடியாதவாறு திரையிட்டு மறைத்துள்ளனர்.
அங்கிருந்து மருத்துவர் சோனியின் வீடு வரை 20 அடி நீளம், 15 அடி ஆழத்திற்கு சுரங்கம் தோண்டியுள்ளனர். இதன் வழியாக வந்து தான் பெட்டியில் இருந்த வெள்ளியை கொள்ளையடித்துள்ளனர். ஆனால் கொள்ளையடிக்கப்பட்ட வெள்ளியின் மதிப்பு மற்றும் எடை குறித்து மருத்துவர் தகவல் கூறவில்லை.அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக கூடுதல் காவல் ஆணையர் அஜய் லம்பா கூறியதாவது இச்சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளோம்.
அவர் ஒரு வர்த்தகர்.அவரின் பிற 4 கூட்டாளிகளை தேடி வருகிறோம். விரைவில் பிடித்து விடுவோம் என தெரிவித்தார். அத்துடன் மருத்துவர் சோனியின் வீட்டில் 3 பெட்டிகள் இருந்துள்ளன. ஒரு பெட்டியில் வெள்ளி இருந்துள்ளதாக கூறுகிறார்.மற்ற இரண்டு பெட்டிகளும் காலியாக உள்ளன. அவற்றில் ஏதும் இருந்ததா என்பதே தெரியவில்லை. அது குறித்தும் விசாரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.